தர்ஹா வழிபாட்டைக் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டமைக்காக ஊர்நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் அநீதி இழைக்கப்பட்ட ஒரு சகோதரின் ஓங்கி ஒலிக்கும்குரல்!
Tuesday, September 21, 2010
Monday, September 20, 2010
முஸ்லிம்கள் இணைவைப்பதற்கு லைசன்ஸ் வழங்கும் புரோகிதர்கள்!
படைத்த ரப் ஆகிய அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் மாபெரும் அநியாயம் என்று கற்பிக்கும் மார்க்கம் இஸ்லாம்! இணை வைக்கும் செயலை அல்லாஹ் மன்னிப்பதே கிடையாது. இணை வைக்கும் நிலையில் தவ்பா செய்யாமல் ஒருவர் மரணம் அடைந்தால் அவர் செல்லவிருப்பது நிரந்தர நரகத்தில் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி குர்ஆன் தெளிவு படுத்துகிறது. ஆனால் இன்று நடப்பது என்ன?
ஒரு புறம் தர்கா வழிபாடு! இறந்து போனவர்கள் தங்கள் பிரார்த்தனைகளைச் செவியேற்பார்கள் என்று கண்மூடித்தனமாக நம்பி இணைவைக்குமு் இழிசெயலில் ஒரு கூட்டம் ஈடுபடுகின்றது! இந்த தர்கா வழிபாடு முற்றிப் போய் ஒரு கட்டத்தில் இந்துக்களின் கடவுள்களையும் வழிபடுவதில் தவறில்லை என்ற நிலையில் சிலர் தரம் தாழ்ந்து விடுவதையும் கண்டு வருகிறோம்!
இணை வைப்பு இவ்வாறு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க இவற்றுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் விதத்தில் முஸ்லிம் பெயர் தாங்கிப் புரோகிதர்களின் பிரச்சாரங்கள் அமைந்திருப்பது தான் படு கேவலமாக உள்ளது! கலிமா சொன்ன முஸ்லிம்களிடம் இணை வைத்தல் ஏற்படாது என்று இறுமாப்புடன் இவர்கள் போலிப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்! இது ஒரு புறமிருக்க ஏகத்துவப் பிரச்சாரம் செய்வது சமுதாயத்தைக் கூறுபோடும் செயல் என்று குட்டையைக் குழப்பும் சில போலி ஒற்றுமை வாத இயக்கங்கள்! ஜன நாயம் ஷிர்க், வழிகேடு என்று சமுதாயத்தைக் குழப்பியவர்கள் அதே ஜனநாய வழிமுறையைத் தேர்ந்தெடுத்து, சாக்கடை அரசியலில் ஈடுபடும் அளவுக்கு தரம் தாழ்ந்து நிற்பதையும் கண்டு வருகிறோம்.
ஒரு முஸ்லிம் தனது பிணி தீர ஒரு கோயிலுக்கு நேர்ச்சை செய்தான். அதன் பின்னர் அவனது நோயும் தீர்ந்து விட்டது! இது ஷிர்க் ஆகுமா? இது பகிரங்கமான ஷிர்க் என்று இஸ்லாமியப் பாடம் பயிலும் குழந்தையும் பதிலளித்து விடும்! ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களை கூறிக் கொள்ளும் புரோகிதர்கள் எவ்வாறு இதற்கு பதிலளிக்கின்றார்கள் என்று பாருங்கள்..
தோப்புத் துறை கந்தூரி விழா! ஆபாச நடன நிகழ்ச்சி!

காரைக்காலில் பள்ளி வாசல் கட்ட பூமி பூஜை! (மதச்சார்பின்மை?!)




நன்றி: தமிழ் இஸ்லாமியக் குழுமம்
Saturday, September 11, 2010
Tuesday, August 31, 2010
Saturday, December 19, 2009
ஸலாதுல்லா ஸலாமுல்லா அர்காசும்மா வலியுல்லா! புதுமைப் பெயரில் ஏர்வாடியில் ஒரு பெண் அவ்லியா!
பள்ளிவாசலில் அல்லாஹ்வை வணஙக்குவதற்காக அவனது பெண் அடியார்கள் சென்றால் அது குழப்பம் விளைவிக்கும் செயல் என்று அதைத் தடுக்கும் கூட்டம் தர்ஹாக்களில் பெண்களின் படையெடுப்பை, அங்கு நடக்கும் அநாச்சாரங்ளைக் குறித்து ஒன்றும் சொல்வதில்லை. அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்ட சமுதாயத்தில் அர்க்காசு உம்மா என்ற ஒரு பெண் தெய்வம்!
கப்று வழிபாட்டுக்கு எதிராக தமிழகத்தில் அடங்கிவிட்ட குரல்கள் மீண்டும் எழுமா? அநாச்சாரம் நடைபெறும் காட்சியைக் காணும் முன் கேரள அறிஞர் ஹுசைன் ஸலஃபி அவர்களின் சிறிய விளக்கம் முடியும் வரை நேயர்கள் சற்றே பொறுமை காக்கவும்.
எச்சரிக்கை!
''(தம்) செயல்களால் மிகுந்த நஷ்டமடைந்தவர்களை உங்களுக்கு நாங்கள் அறிவிக்கவா? என்று (நபியே!) நீர் கேட்பீராக! அவர்கள் எத்தகையோரென்றால், இவ்வுலக வாழ்வில் அவர்களின் முயற்சி பழுதடைந்து விட்டது (எனினும்) அவர்களோ, நிச்சயமாக தாங்கள் அழகிய செயல்களைச் செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். (18 அல்கஹ்ஃபு 103,104)
"கப்றுகளை ஸியாறத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" (அறி-அபூ ஹுறைரா நூல்-இப்னுமாஜா)
"கப்றுகளை நாடி யாத்திரை செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்" (அறி அபூ ஸயீத் (ரலி) நூல் - முஸ்லிம்)
கப்றுகளை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிக்கொண்டவர்கள் மீது அல்லாஹுவின் சாபம் இறங்குகிறது. (அறி -ஆயிஷா (ரலி) நூல்-புகாரி, முஸ்லிம்)
Thursday, December 10, 2009
மாதா அமிர்தானந்தாமயி (வீடியோ)
ஆசி வழங்கும் அம்மா! ஏற்று வாங்கும் முஸ்லிம்கள்?
தனி மனித வழிபாட்டை வன்மையாக மறுக்கும் மார்க்கம் இஸ்லாம்! தனக்காக பிறர் எழுந்திருப்பதைக் கூட அனுமதிக்கவில்லை உத்தம நபி (ஸல்). அப்பேர் பட்ட மார்க்கத்தின் சொந்தக்காரர்கள் என்று கூறிக் கொண்டு சில பெயர் தாங்கிகள் புரியும் அட்டூளியம் பாரீர்!
லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்! உச்சரிப்பு தவறினாலும் உணர்ச்சியுடன் பாடும் சந்நியாசிகள்.
எரியும் விளக்கில் விழும் விட்டில்கள் போல் அம்மா முகத்தில் விழும் பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள்! தொப்பி தாடி வைத்த பெரியவர்! மாலையிட்டு முத்த ஆசி வாங்கும் அரபி!
முஸ்லிம்களில் ஷிர்க் இல்லை, தவ்ஹீத் வாதிகள் பிரிவினை வாதிகள், தவ்ஹீத் பிரச்சாரம் பிரிவினைப் பிரச்சாரம் என்று கூப்பாடு போடுபவர்கள் எங்கே? பாபரிப் பள்ளிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் ஆர்ப்பாடி ஆர்ப்பரித்து இயக்கம் வளர்க்கும் வீரர்கள் எங்கே?
சொந்தம் சமூகத்தில் புரையோடியிருக்கும் இணைவைப்புக்கு கொள்கைக்கு எதிராக கேரளாவில் ஒலிக்கும் குரல்கள் தமிழகத்தில் ஏன் ஓய்ந்து விட்டன?!
தனி மனித வழிபாட்டை வன்மையாக மறுக்கும் மார்க்கம் இஸ்லாம்! தனக்காக பிறர் எழுந்திருப்பதைக் கூட அனுமதிக்கவில்லை உத்தம நபி (ஸல்). அப்பேர் பட்ட மார்க்கத்தின் சொந்தக்காரர்கள் என்று கூறிக் கொண்டு சில பெயர் தாங்கிகள் புரியும் அட்டூளியம் பாரீர்!
லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்! உச்சரிப்பு தவறினாலும் உணர்ச்சியுடன் பாடும் சந்நியாசிகள்.
எரியும் விளக்கில் விழும் விட்டில்கள் போல் அம்மா முகத்தில் விழும் பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள்! தொப்பி தாடி வைத்த பெரியவர்! மாலையிட்டு முத்த ஆசி வாங்கும் அரபி!
முஸ்லிம்களில் ஷிர்க் இல்லை, தவ்ஹீத் வாதிகள் பிரிவினை வாதிகள், தவ்ஹீத் பிரச்சாரம் பிரிவினைப் பிரச்சாரம் என்று கூப்பாடு போடுபவர்கள் எங்கே? பாபரிப் பள்ளிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் ஆர்ப்பாடி ஆர்ப்பரித்து இயக்கம் வளர்க்கும் வீரர்கள் எங்கே?
சொந்தம் சமூகத்தில் புரையோடியிருக்கும் இணைவைப்புக்கு கொள்கைக்கு எதிராக கேரளாவில் ஒலிக்கும் குரல்கள் தமிழகத்தில் ஏன் ஓய்ந்து விட்டன?!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார் முஷ்ரிக்குகளுடன் கலந்து விடும் வரையிலும், என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார் சிலைவணக்கத்தில் ஈடுபடும் வரையிலும் மறுமை நாள் ஏற்படாது''
Monday, May 18, 2009
Subscribe to:
Posts (Atom)
